vendredi 8 avril 2011

Raj TV யின் பித்தலாட்டம்

TV சீரியல் மக்களை முட்டாள்களாக ஆக்குகின்றது என்றால் போட்டி என்ற பெயரில் நடக்கும் பித்தலாட்டங்களால் மக்களின் பணம் சுரண்டபடுகின்றது, அதற்கு ஒரு உதாரணம் Raj TV ல் திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 5,30 PM ஒளிபரப்பு ஆகும் சினிமா கொண்டாட்டம் நிகழ்ச்சியும், தினமும் இரவு 10,30 PM ஒளிபரப்பு ஆகும் சினிமா தெரியுமா என்ற நிகழ்ச்சியும் தான், இதில் சினிமா பிரபலங்களின் பாதி முகத்தை காட்டி அவர் யார் என்று சொல்லி பரிசாக பல ஆயிரங்களை பெற்று கொள்ளுங்கள் என்று கூவிகொண்டே இருப்பார்கள், இதில் என்ன மோசடி என்று நீங்கள் கேட்கலாம், நீங்கள் அழைக்கும் ஒவ்வொரு அழைபிற்க்கும் ஒரு நிமிடதிற்கு 10 ரூபாய் இது நீங்கள் அழைக்க ஆரம்பித்த உடன் கட்டணம் கழிக்க ஆரம்பித்து விடும், உங்கள் call waiting ல் இருந்தாலும் அல்லது engaged ல் இருந்தாலும் கட்டணம் செலுத்தியாகவேண்டும், நீங்கள் எப்போது அழைத்தாலும் engaged தான் அப்படியென்றால் யாரோ பேசிக்கொண்டு இருகின்றர்கள் என்றுதானே அர்த்தம ஆனால் TV ல் ஒரு நேயர் கட பேசிக்கொண்டு இருக்கமாட்டர்கள் நிகழ்ச்சி நடத்தும் நபர்தான் உங்களை கூவி கூவி பேசி நம்மை அழைக்க சொல்லுவார், நீங்கள் பலநாள் முயற்சி செய்து லைன் கிடைத்து பேச முயன்றால் பேச மாட்டர்கள் வேண்டும் என்றே இணைப்பை துண்டித்து விட்டு tower இல்லை network இல்லை என்று உங்களை பேச விட மாட்டர்கள், இவர்கள் காட்டும் படத்தை ஆறு வயது குழந்தை கூட சொல்லி விடும் ஆனால் இணைப்பு கிடைத்து பேசும் நபர் எப்போதும் தவறான விடையை சொல்லுவார் காரணம் அந்த நபர்கள் எல்லோரும் நிகழ்ச்சி நடத்துபவர்களால் set up செய்யபட்ட ஆட்கள திரையில் கமல் இருந்தால் MGR என்பார்கள் சினேகா இருந்தால் KR, விஜயா என்பார்கள் பரிசு தொகை 40.000 லிருந்து 10000 வரை உங்களுக்கு லைன் கொடுக்க மாட்டர்கள் பரிசு 3000 என்று அறிவித்து அப்பாவி நேயர் ஒருவருக்கு லைன் கிடைக்கும் அதற்குள் அந்த நேயர் பல ஆயிரங்களை இழந்து இருப்பார், இது போல் பல நேயர்கள் பணத்தை இழந்தது ஏராளம், கடைசியாக கொடுக்கும் பரிசு உண்மையாக நேயர்களுக்கு போகின்றதா அல்லது இவர்களே எடுத்து கொள்ளுகின்றார்கள என்பது சந்தேகம், காரணம் பரிசுபெற்றவர் எந்த ஊர் என்ன பெயர் என்ற அறிவிப்பும் கிடையாது மேலும் இந்த மோசடி பற்றி அறிய கீழ கண்ட web sit கு செல்லுங்கள் http://www.consumercomplaints.in/complaints/cinema-theriyuma-program-c442513.html

lundi 1 novembre 2010

பயன் இல்லா டிஜிட்டல் போர்டுகள்

இப்போது எல்லாம் எதுக்கு டிஜிட்டல் போர்டு வைக்கின்றது என்று விவஸ்தை இல்லாமல் போய்விட்டது, அதனால் தான் எல்லா ரோடு களிலும் மரம் இருக்கின்றதோ இல்லையோ கண்டிப்பாக டிஜிட்டல் போர்டு இருக்கின்றது, பிறந்த நாள் வாழ்த்து முதல் சாவு வீடு வரை கல்யாணம் முதல் அரசியல்வாதியை ஐஸ் வைக்கின்றது வரை டிஜிட்டல் போர்டு மயம் தான்,ஒரு பத்து வருடங்களுக்கு முன்புவரை வீட்டு விஷேஷம் என்றால் அது அவரவர் வீட்டோடு முடிந்து போய்விடும், இப்பொது ஊர் அறிய விளம்பரம் வைத்தல் தான் அதற்க்கு ஒரு அர்த்தம் என்று பாமரனும் நினைகின்றான், அதற்காக கடனையாவது வட்டிக்கு வாங்கி செலவு செய்கின்றான்,

போட்டோ ஷாப் யாருக்கு உபயோக படுகின்றதோ இல்லியோ இது கண்டுபிடிக்கப்பட்டது நிச்சயமகா நம்ம ஊர் அரசியல்வாதிளுக்கு பெரிதும் உதவி செய்கின்றது, அரசியல் கட்சிகள் அல்லது லோக்கல் தலைவர்களுக்கு வைக்கும் போர்டுடில் தான் காமேடி ஆரம்பிக்கின்றது , இதற்கு சில நடைமுறைகள் இருபது போல் தோன்றுகின்றது, ஓர் அரசியல் போர்டு என்றால் இடது பக்கம் MGR விரலை வாயில் வைத்து சிரித்துக் கொண்டு இருப்பார். அண்ணா தன்னுடைய வெற்றிலை பாக்கு போட்ட பல்லுடன் சிரித்துக்கொண்டு இருப்பார், இருகின்ற இறந்த தலைவர்கள் படங்கள் வட்ட வட்ட மகா போட்டு இருப்பார்கள், அதற்கு கீழே கலைஞரோ ஜெயலலிதாவோ இன்ன பிற தலைவர்களின் போட்டோ பெரிய சைஸ்ல் இருக்கும்,

இதற்கு வலது பக்கம் நம்முடிய விழா நாயகன் லோக்கல் தலைவர் வித விதமான கெட் அப்பில் போஸ் கொடுத்துக்கொண்டு இருப்பார், அவற்றில் சில அவர் வாயில் அல்லது கன்னத்தில் பேனாவை வைத்து எதோ கவேரிபிரசினைக்கு தீர்ப்பு எழுதும் rangeக்கு யோசித்துக்கொண்டு இருப்பார், அல்லது காதில் செல்போன் வைத்துக்கொண்டு பிகர் இடம் கடலை போடுவது போல் act கொடுபார், சில சமயம் எஜமான் படம் ரஜினி போல் தரையை தொடும் மலையோடு கும்பிட்டு கொண்டு நடப்பார், அப்படி இல்லை என்றல் தலைவர் படத்தை முன்று முறை காப்பி பேஸ்ட் செய்து இருப்பார்கள் இதற்கு அர்த்தம் தலைவர் 3 ஆள் பலத்துடன் இருக்கின்றார் என்று அர்த்தம் , சில விளம்பரங்களில் தலைவர் ஒரு சிங்கத்துடன் புலியுடன் சிறுத்தையுடன் நாய் போன்ற விலங்குகளுடன் இருப்பர், இதற்கு பொருள் என்னவென்றால் இந்த விலங்கும் தலைவரும் equal என்று அர்த்தம், அடுத்து தவறாமல் இடம் பேரும் வேஷம் தலைபகை கட்டிக்கொண்டு இருப்பார் , தலைவர் வாழ்நாளில் கோட் சூட் போட்டே இருக்க மாட்டார் ஆனால் போட்டோ ஷாப் புண்ணியத்தால் தலைவருக்கு கோட் சூட் போட்டு பெரிய தொழில் அதிபர் போல் மாற்றி இருப்பார்கள், கோட் சூட் போட்டுகொண்டு கையில் லேப் டாப் வைத்துக்கொண்டு netஇல் பிட்டு படம் பார்ப்பது போல் போஸ் கொடுப்பர், இப்படியாக பல வேஷங்கள் கெட் அப்ப்கள் என்று சொல்லிக்கொண்டு போகலாம், சொல்ல மரந்து விட்டேனே சில சமயம் ஆழ்கர் ஆற்றில் இறங்கும் திருவிழா போட்டோவுடன் நம்ம தலைவர் 10 அல்லது 15 பேர் முன்பு பேசிய பொது போடோவுடன் இணைத்து எதோ வரலாறு காணாத குடத்தில் பேசுகின்ற மாதிரி ஓர் தோற்றம் ஏற்படுத்தி இருப்பார்கள், சிலவேளை காந்தி, காமராஜர் போன்ற தலைவர்களின் பிளாக் அண்ட் ஒய்ட் படத்துடன் நம்ம லோக்கல் தலைவரும் பிளாக் அண்ட் ஒய்ட் படத்துடன் இருப்பார், இதற்கு அர்த்தம் தலைவர் நீண்ட நாள் அரசியல் வானில் சிறகடித்து பறகின்றார் என்பதாகும்,
இப்படியாக போட்டோ ஷாப் புண்ணியத்தில் தலைவரை வித விதமன கெட் அப்பில் மாற்றி அற்ப சந்தோஷம் பட்டு கொள்கின்றார்கள்,


அடுத்ததாக தலைவரை வாழ்த்தும் சொற்கள் இதற்கு ஒரு Dictionary போடலம் இதை எல்லாம் எப்படித்தான் யோசிப்பார்கள் என்றே தெரியவில்லை, விடிவெள்ளியே, நாளைய முதல்வரே, தமிழா, மாவீரனே இப்படியாக சொல்லிக்கொண்டே போகலாம்,

கடைசியாக வாழ்த்தும் அன்பு உள்ளங்கள் போட்டோ இருக்கும் இதை பார்க்கும்போது எதோ காணமல் போனவர் பற்றிய அறிவிப்பில் இருக்கும் போட்டோ போல் இருக்கும் அல்லது போலீஸ் ஸ்டேஷன் இருக்கும் போட்டோ போல் இருப்பதாய் நீங்கள் உணரலாம், இதுவே பேனர் வைப்பவர் பசையுள்ள ரியல் எஸ்டேட் தாதா அல்லது சாராய அதிபர் என்றல் கை விரல் கழுத்து எல்லாம் நகை போட்டுகொண்டு ஒரு கும்பிடு போட்டுகொண்டு இருப்பர்,

இந்த பேனர்களால் மக்களுக்கு எதாவது நன்மை விழிப்புணர்ச்சி மெசேஜ் இருகின்றத என்றல் ஒரு பைசாவுக்கு பலன் இல்லை, வைக்கின்ற கட் அவுட் காற்றில் மக்கள் தலையில் விழாமல் இருந்தால் அதுவே பெரிய நன்மை, ஆனால் இதை பார்த்து பொது மக்கள் தான் முகம் சுகின்ற்கள்,